• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES



    சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் அலுவலகத்தில் நடந்தது.

    ஊராட்சி தலைவர் விமலா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சின்னராஜ் பங்கேற்றார்.

    கூட்டத்தில் அரவிந்த நகருக்கு கழிப்பிட வசதியும், சாக்கடையும், ஆசிரியர் காலனிக்கு குடிநீர் வசதியும் செய்து கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டன.

     கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சிக்காரம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம், கண்ணார்பாளையம் துவக்கப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியம், சாமிநாதன், வார்டு உறுப்பினர்கள் முன்னாள் துணைத்தலைவர் ஜெகநாதன் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

     கூட்டத்தில் வரவு செலவு கணக்கு படித்தவுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சாலை, தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஊராட்சி செயலர் நேசராணி நன்றி கூறினார்.

    பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

    உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன.

    ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

    அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

    பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

    பூக்களின் பயன்கள்

    ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

    மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

    செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

    செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

    மகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

    வில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

    சித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

    தாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

    தாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

    கனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

    தாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

    பூக்களைச் சூடும் கால அளவு

    முல்லைப்பூ – 18 மணி நேரம்

    அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

    தாழம்பூ – 5 நாள்கள் வரை

    ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

    மல்லிகைப்பூ – அரை நாள் வரை

    செண்பகப்பூ – 15 நாள் வரை

    சந்தனப்பூ – 1 நாள் மட்டும்

    மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

    மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

    பூக்களைச் சூடும் முறை

    பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.

    உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.

    மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

    ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

    மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.

    மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

    முல்லைப் பூ, வில்வப் பூ ஆகியவற்றை குளித்த பின்பு சூடலாம்.

    உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

    பூ சூடுங்கள் நன்மை பெறுங்கள்

    பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

    இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.

    தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும்.

    ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

    மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

    பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

    மனமாற்றத்துக்கு உதவுகிறது.

    மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    மகிழ்ச்சியை உண்டாக்குகிறது
    ஆகவேதான் பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.


    தமிழக முதல்வரிடம் சிறந்த காவல் நிலையத்திற்க்கான விருதுபெற்ற சி-2 பந்தய சாலை காவல் ஆய்வாளர் உட்பட காவல் நிலைய குழுவினருக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி -2 பந்தய சாலை காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்திற்க்கான தகுதியில் முதல் பரிசை வென்றதற்காக மாநகர காவல் ஆணையர் சி-2 பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். கோவை மாநகர காவல் துறையில் மத்திய சரகத்தில் பி4 காவல் நிலையமாக இயங்கிவந்த பந்தய சாலை காவல் நிலையம் 2015ஆம் ஆண்டு முதல் சி-2 பந்தய சாலை காவல் நிலையமாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகிய பிரிவு நிலையங்கள் இயங்கி வருகிறது.

    இந்தநிலையில், மாநில அளவில் 2018ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையத்திற்க்கான தகுதிப் போட்டியில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு வசதிகளுடன் அக்காவல் நிலையம் நவீனமயமாக்கபட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல இந்த காவல்நிலையத்தில் நிர்வாகம், ஆவணங்கள், வழக்கின் புலன் விசாரணை ,நீதிமன்ற வழக்கு கோப்புகள் ஆகியவவை முறையாக செயல்படுத்தப்பட்டது. இப்படியிருக்க தமிழக முதலமைச்சர் அவர்களால் மாநில காவல் துறையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக பந்தய சாலை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு நேற்று குடியரசு தினத்தன்று பாராட்டுக்களும் விருதுகளும் பெறப்பட்டது.
    இதைத்தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு, உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன் ஆகியோர் பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்ற ஆளினர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கௌரவப்படுத்தினர்.
    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் சுமித் சரண் கூறும்போது:-

    பந்தயசாலை காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமையளிக்கிறது. இதற்கு முன்னதாக நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் என்ற விருதினை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றது. தற்போது, கிடைத்த விருது காவல் நிலைய அதிகாரிகளின் கடும் உழைப்பு, நல்லொழுக்க முதலானவற்றால் கிடைத்துள்ளது.இந்த விருதை வழங்கிய முதலமைச்சர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மிக்க நன்றி. சுமார் 24 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதரீதியான அமைதியை நிலைநிறுத்துவது, வழக்குகள் தேக்காமல் விரைவாக முடிப்பது, போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் வழக்குகளை கையாள்வது, காவல் நிலைய காவலர்களின் ஒழுக்கம் ஆகியவை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட இந்த விருதுக்கான தேர்வு 2 மாதங்கள் சென்னையிலிருந்து வந்த சிறப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோவையில் அடுத்தடுத்து ஸ்மார்ட் காவல் நிலையங்கள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.




    பாரதம் - வார்த்தை வரையறைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது, மரபிற்கெல்லாம் தொன்மையானது. தன்னுடைய பல்லாயிரம் கால இருப்பில் சாத்தியங்களின் உச்சத்தையும் தாளா துயரங்களையும் அது பார்த்திருக்கிறது. கடந்த 70 ஆண்டுகால சுதந்திரத்தில், முதல் பல ஆண்டுகள் பிரிவின் வலியிலும், ஒரு தேசமாய் பிழைப்பு நடத்துவதற்கான போராட்டத்திலும் கடந்து போயின. கடந்த 20, 25 ஆண்டுகளில் நாம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோம்.
    சாத்தியங்கள் நிரம்பக்கொண்ட ஒரு மகத்தான தேசம் இது. ஆனால், சாத்தியங்களுக்கும் நிஜத்திற்கும் ஒரு தொலைவு இருக்கிறது. இந்த தொலைவினை கடப்பதற்கு தேவையான துணிவும் உறுதியும் நம்மிடம் இருக்கிறதா?

    அனைவரையும் இணைத்துக்கொள்ள கூடிய ஒரு விழிப்புணர்வான பொருளாதாரத்தை அடையக்கூடிய விளிம்பில் இந்தியா நிற்கிறது. இந்தச் சமயத்தில், வெளியிலிருந்து ஏற்பட்ட தாக்கத்தால் அல்லாமல், நம் தேசத்திற்கு எது சிறப்பாய் வேலை செய்யும் என்பதையும், நம் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு, அதன் பண்பினை விழிப்புணர்வுடன் நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
    உள்நிலையிலும் சரி புறச்சூழ்நிலையிலும் சரி, வெற்றிக்கான அர்த்தத்தை மாற்றி அமைக்கக்கூடிய அம்சங்களை வழங்கக்கூடிய திறன் இந்த கலாச்சாரத்திற்கு இருக்கிறது. முதல்முறையாக, மனிதனுக்கு இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு அளிப்பதற்கு தேவையான திறமை, வளம், தொழில்நுட்பம் எல்லாம் இந்த தலைமுறையிடம் இருக்கிறது. இல்லாதது என்னவோ அனைவரையும் இணைத்துக் கொள்கிற அந்த விழிப்புணர்வு-நிலைதான். நாம் பாரதம் எனச் சொல்வதற்கு அடிப்படையே இந்தத் தன்மைதான்.
    இந்த ஆழந்த பாரம்பரியத்துடைய முழு மகிமையை நாம் சுவைப்பதற்கான நேரம் இது. சாத்தியங்கள் நிரம்பக்கொண்ட ஒரு மகத்தான தேசம் இது. ஆனால், சாத்தியங்களுக்கும் நிஜத்திற்கும் ஒரு தொலைவு இருக்கிறது. இந்த தொலைவினை கடப்பதற்கு தேவையான துணிவும் உறுதியும் நம்மிடம் இருக்கிறதா? நம்முன் இருக்கும் கேள்வி இது.
    இந்த தலைமுறை மக்களாகிய நாம், நம் தேசத்தை உயர்ந்த தேசமாய் மாற்றக்கூடியை துணிவும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது என்பதை காண்பித்து, இதனை உயர்ந்த தேசமாய் மாற்றியமைக்க வேண்டும். இதனை நாம் நிகழச்செய்வோம்.


    Young Scientist Programme 2020 

    YUVIKA 2020YUva VIgyani KAryakram (YUVIKA) 2020

    Indian Space Research Organisation has launched a special programme for School Children called “Young Scientist Programme” “YUva VIgyani KAryakram” (युविका) from the year 2019. The second session of the programme is scheduled to be held during the month of May 2020.   
    The Program is primarily aimed at imparting basic knowledge on Space Technology, Space Science and Space Applications to the younger ones with the intent of arousing their interest in the emerging areas of Space activities. The program is thus aimed at creating awareness amongst the youngsters who are the future building blocks of our Nation. ISRO has chalked out this programme to “Catch them young”.
    The programme will be of two weeks duration during summer holidays (May 11-22,  2020) and the schedule will include invited talks, experience sharing by the eminent scientists, facility and lab visits, exclusive sessions for discussions with experts, practical and feedback sessions.
    3 students each from each State/ Union Territory will be selected to participate in this programme covering CBSE, ICSE and State syllabus. 5 additional seats are reserved for OCI candidates across the country.
    The selection will be done through online registration. The online registration will be open from February 03 to 24, 2020. Those who have finished 8th standard and currently studying in 9th standard (in the academic year 2019-20) will be eligible for the programme. Students who are studying in India including OCI (Overseas Citizen of India) are eligible for the programme. The selection is based on the 8th Standard academic performance and extracurricular activities. The selection criteria is given below.
    S.No
    Description
    Weightage
    1
    Performance in the 8th Std Examination
    60%
    2
    Prize in school events conducted by the School or Education board from the year 2016 onwards (like Elocution, Debate, Essay Writing....) at District/State/National/ International Level  (The higher level will be considered for weightage)
    2/4/6/10%
    3
    Winners of  District/State/National/International Level sports activities conducted by School or Education board from the year 2016 onwards (The higher level will be considered for weightage)
    2/4/6/10%
    4
    Scouts and Guides/NCC/NSS Member - during the current academic year (2019-20)
    5%
    5
    Studying in Rural School (Certificate of proof to this effect to be produced from the head of the school – Criteria: The school, where the candidate is studying should be located in Block/Village Panchayath Area)
    15%
    Total
    100%
     
    Students belong to the rural area have been given special weightage in the selection criteria. In case there is tie between the selected candidates, the younger candidates will be given priority.
    The interested students can register online through ISRO website www.isro.gov.in from February 03, 2020 (1700 hrs) to 24 February 2020 (1800 hrs). The exact link will be available on 03 February, 2020. The list of the provisionally selected candidates from each state will be announced on 02 March, 2020. The provisionally selected candidates will be requested to upload the attested copies of the relevant certificates on or before 23 March, 2020. After verifying the relevant certificates the final selection list will be published on 30 March, 2020.
    It is proposed to conduct the residential programme during 11-22 May, 2020, at 4 centres of ISRO. The selected students will be requested to report to any one of the ISRO/DOS centres located at Ahmedabad, Bangalore, Shillong and Thiruvananthapuram. The selected students will be accommodated in ISRO guest houses/hostels. Expenditure towards the travel of student (II AC fare by train from nearest Rly Station to the reporting centre and back), course material, lodging and boarding etc., during the entire course will be borne by ISRO. II AC fare will also be provided to one guardian/parent for drop and pick up of student from the reporting centre.
    For any further clarification, please contact yuvika2020@isro.gov.in Ph.: YUVIKA Secretariat (Respond & AI) : 080 2217 2269.
    கிராம ஊராட்சிகளில் ஐந்து விதமான நிலைக்குழுக்கள் அமைக்கவும், அது தொடர்பான விதிமுறைகளை பின்பற்றவும் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராம ஊராட்சியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  இதில் நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய ஐந்துவிதமான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் நியமன குழுவில் தலைவர் தவிர இரண்டு ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதர குழுக்களில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் அல்லாத வெளி நபர்கள் இருவர் இருக்கலாம்.


    நியமனக்குழு, ஊராட்சியில் இருந்து ஊதியம் பெறும் பதவிக்கு நியமனம் தேவைப்படும்போது கூட்டப்பட வேண்டும். வளர்ச்சிக்குழு மக்கள் நலம், சுகாதாரம், குடிநீர், சமுதாய சொத்துகள் ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்துதல், தொற்றுநோய் பரவாமல் தடுக்க, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை மேற்பார்வையிடுதல், நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையங்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்குதல் இக்குழுவின் பணியாகும். வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழுவில் வேளாண்மை, தோட்டக்கலைமற்றும் நீர் வேளாண்மை ஆகிய திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த ஊராட்சிகளுக்கு உதவுதல் இதன் பணியாகும்.

    பணிகள் குழு மத்திய மாநில அரசு திட்டங்களை தரத்துடன் உரிய நேரத்தில் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்படுத்த ஊராட்சிக்கு உதவி செய்தல் ஆகும்.  கல்வி குழு அனைவருக்கும் கல்வி, முறைசாரா கல்வி, நூலக மேம்பாடு, எழுத்தறிவு மற்றும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியாகும்.  இக்குழுக்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


    இன்று தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்தல் குறித்தும் ஒவ்வொரு வாக்காளரின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை ஆண்டுதோறும் மேற்கொண்டுவருகிறது மத்திய அரசு. அதன் ஓர் அங்கம்தான் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாகக் கடைப்பிடிப்பது. 18 வயது நிரம்பிய எந்த ஓர் இந்தியக் குடிமகனும், தேர்தலின்போது வாக்களிக்க முழு உரிமையுடையவர் ஆவார்.
    வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை, தேர்தலின் அவசியத்தை எல்லோருக்கும் உணர்த்துவதே இதன் நோக்கம். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்குதல், வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் எனப் பல்வேறு புதுமைகளைப் புகுத்திவருகிறது தேர்தல் ஆணையம்.

    வரக்கூடிய தேர்தல்களை மக்களாகிய நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்தலின்போது மக்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும், வளரும் சமுதாயத்தினரின் வாக்குரிமைகளை நிறைவேற்ற இருக்கும் எளிய வழிமுறைகள் எவை, ஐந்தாண்டு காலம் நம்மை ஆளக்கூடிய அரசியல் ஆளுமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற பல கேள்விகளுக்கு உரிய பதிலை தேடிச் செல்வதன் அடையாளத் தேதியே ஜனவரி 25. மேலும், 18 வயது நிறைந்த ஒவ்வொருவரின் வாக்குரிமையும் முழுவதுமாக நிறைவேற்றி, எதிர்கால இந்தியாவை பலப்படுத்துவதற்கான தொடக்க நாளே தேசிய வாக்காளர் தினம்.
    இந்திய வாக்காளர்களுக்கு, பல்வேறுவிதமான வாக்கு உரிமைகள் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி, குற்ற வழக்குகள், சொத்துகள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள வாக்காளருக்கு முழு உரிமையுண்டு. பணம் கொடுத்து தனக்கு வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வேறு ஒருவருக்கு வாக்கு அளிக்கக் கூடாது எனக் கட்டளையிடவோ இந்திய ஜனநாயகத்தில் இடமே இல்லை. நம் உரிமை நம் ஓட்டு என்பதற்கிணங்க, நம்மையும் நம் நாட்டையும் ஆளக்கூடிய நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே, நமக்கான நல்ல பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது. 

    அதிகாரமும் ஆட்சியும் பணம் படைத்தவர்களின் கையில் இருக்கும் வேளையில், நம்பிக்கையின் அடிப்படையிலும், சாதி, இன, பேதம் பார்க்காமல் சமூகத்தை உயர்த்துவதற்கான உயர்ந்த தலைவனாக ஒருவரைத் தேர்தெடுத்த மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காதபோது, வரக்கூடிய தேர்தல்களில்கூட மக்கள் யாரை நம்பி வாக்களிப்பார்கள்? இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில்தான், தனக்கான உரிமையைப் பறைசாற்றக்கூடிய தினமாக ஜனவரி 25-ம் தேதி, தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  
    இன்றைய அரசு நடைமுறைகளில் நாளைய அரசாங்க நடைமுறையை நிர்ணயிப்பது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளே தவிர, மக்கள் அல்ல என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. `எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளிஎன முடிவெடுப்பது போன்றதுதான் ஒவ்வொரு வாக்காளரின் இன்றைய நிலை. தன் அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள், வாக்காளர்களே. நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர்.  இந்தப் பாட்டாளி வர்க்கத்தினரை ஒன்றுசேர்த்து, அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனிமனித உரிமைகளுக்கும் தரமான செயல்முறைகளுக்கும் வழிவகை செய்து, எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ அவரைத் தேர்த்தெடுத்தால்தான், எதிர்கால இந்தியா ஏற்றம் மிகுந்ததாக அமைக்க முடியும்.
    தேர்தலின்போது, அடிதடி, கள்ள ஓட்டு போடுவது போன்றவையே பிரதானமாக இருந்தன. விலை மதிப்பற்ற வாக்குகளை விற்பது, நாட்டையே விற்பதற்குச் சமம் என்பதை நீங்கள் அறிவீர். வாக்குரிமை எனும் சக்தியால் பலம் வாய்ந்த அரசுகளும், தலைவர்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்; புதிய சட்டங்கள் பிறந்திருக்கின்றன; பல சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த முறை மக்களிடம் போய் ஓட்டு கேட்க வேண்டும் என்ற கட்டாயத்தால்தான் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துவிடுகின்றன. 18 வயது நிறைந்த வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும் தங்களுக்குக் கொடுக்கப்படும் பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல், தங்களின் வாக்குரிமை எனும் கருவியைப் பயன்படுத்தி இந்தியாவை மாபெரும் ஜனநாயக நாடாகக் கட்டமைத்திட, இந்நாளில் உறுதியேற்போம்!


    கோவை மாநகராட்சி பொது நிதியிலிருந்து 168 கோடியில் வெள்ளலூரில் 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார். இவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



    அன்றாட வாழ்வில் உடல்நலம் காக்க இன்றியமையாத பயிற்சியாக நடை இருப்பதுபோல் உளநலம் பேண உதவும் ஒரு பயிற்சியாக நாம் வைத்துக்கொள்ள வேண்டியது, வாசிப்பு. 
    'பணிபெறுதலுக்கான அளவோடு முடிந்துவிடுகிறது, படிப்பு' என்பது மூடத்தனம். சுவாசிக்கும் காலம் வரை சுகமாய் வாழ, வாசிப்பே உயர்துணை; அதுவே உயிர்த்துணையும். 
    காலையும் மாலையும் கைகள் வீசிக் காலார நடப்பது உடலுக்கு எவ்வளவு சுகமோ, அவ்வளவு சுகம், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து மனங்குளிர வாசிப்பது. 
                                  
    அருளுணர்வை, அல்லது தன்னம்பிக்கை தரும் மந்திரம் போன்ற நல்ல தொடர்களைத் தரும் உயர்ந்த புத்தகங்களில் இருந்து நெஞ்சம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்குக் கொஞ்சமாய்ப் படித்தால் கூடப் போதும். 
    வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகிறதோ இல்லையோ, வாய் விட்டு வாசித்தால் மனத்தைப் பீடித்திருக்கும் மௌன அழுத்தங்கள் தானே விடைபெற்றுப்போகும். 
    மௌனவாசிப்போ, மகத்தான சுகானுபவம். அதுபோல், மாலையில் இயலாவிடினும் இரவில்! 'உணவு முடித்தபின் நல்லுறக்கம் வாய்க்க மெல்லிய நடை தேவை' என்று சொல்கிறார்கள். அது உடலுக்கு; அதுபோல் மனதுக்கும் மெல்லிய வாசிப்பு இதந்தரும். 
    பலப்பல எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் வந்து அழுத்த, நல்லுறக்கமின்றித் தவிக்கும் கணங்களில், மெல்லிய தென்றல் போன்ற உரைநடை நூல்கள் பெரிதும் உதவிடும். தனிமைக்குத் துணையாகும் எந்தவொரு நூலும் தன்னலங் கருதா உன்னதத்தோழன். 
    எத்தனை முறை எடுத்துப் படித்தாலும் முதல்முறை போலவே, ஈர்க்கும் புத்தகம், இனிய காதல்இணை; தடுமாறும் கணங்களில் தடம் மாறிவிடாமல் தாங்கி நெறிப்படுத்தும் நூல், நல்லாசான்; எந்த நிலையிலும் இன்னுயிர்க்கு, இன்னல் வாராமல் காப்பது தெய்வநூல்! 
    இப்படி எல்லா நிலைகளிலும் மனிதர்கட்குக் கூட வரும் ஞானப் பெட்டகங்கள் நூல்கள்; நெறியின் புறங்கொண்டு நிறுத்தி மனிதமனங்களை மாசுபடுத்தும் தீயசக்திகளை ஒட்டவிடாமல் துரத்துகின்ற தூய தேவதைகள்! 
    எழுதியவரையும், எடுத்து வாசிப்பவரையும் நேருற நிறுத்திச் சீருற ஆக்குவது வாசிப்பு. வாசிப்பு என்பது, வாழ்வை மேன்மையாக்கும் தவம். 
    வரிகளாய் விரியும் வாசகங்களின் உள்ளே, வாழ்க்கை அனுபவங்கள் பதிவான அழகை ஒன்றி வாசிப்பது, ஒருவகை தியானம்; நின்று சிந்திப்பது ஆழ்ந்த தியானம்; அனுபவத்தில் செயல்படுத்தும்போது, அது யோகம். இந்நிலை தொடர்ந்து வரவர, தத்தம் நிலையில், தொலைநோக்குத் திறனாகிய தீர்க்கதரிசனப் பார்வை புலப்படும். 
    நாட்பட நாட்படக் கூர்பெறும் இத்திறத்தினால், தனிநபர்க்கும், சமுதாயத்திற்கும் நன்மையே பெருகும். அத்தகைய தனிநபர்களே, சமுதாயம் போற்றும் சான்றோர்களாக என்றென்றும் வரலாற்றில் வாழ்கிறார்கள். 
    வாசல் இல்லாத வீடும் வாசிப்பு இல்லாத வாழ்நாளும் பயனற்றவை என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். அத்தகு அனுபவம் வாய்க்கப் பெறாதவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பல்வேறு அல்லல்களுக்கு ஆட்பட்டுத் தவிப்பதைக் காண்கிறோம். 
    நலம் வேண்டி மருத்துவர்களை நாடுகிறவர்களின் உடற்கூறுகள்தாம் பெரும்பாலும் பரிசோதனைகளுக்கு ஆட்படுகின்றனவேயன்றி, உள்ளம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை. பல சமயங்களில் இனம்புரியாத மன அழுத்தங்களே, உடல்நலம் கெடுக்கும் காரணிகளாகவும் ஆகிவிடுகின்றன. 
    சின்னச் சின்ன உடல்சார் சிக்கல்கள்கூட, பென்னம்பெரிய மனக்கவலைகளை வளர்த்து நம்மை நோயாளிகளாக்கி விடக்கூடியவை. அவற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் கவசங்கள், புத்தகங்கள். 
    பிறர் அனுபவங்களையும் தன்னனுபவமாக்கித் தரக்கூடியது வாசிப்பு. பயன்படுத்தாத கத்தி, துருப்பிடிப்பதுபோலத்தான் பயன்பாடில்லாத புத்தியும். வரம்பு மீறிப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், கருவிகள் பழுதாகிவிடுகின்றன; அவைபோல், பயன்படுத்தாதவையும். 
    அந்த வரிசையில் உடல் உறுப்புகளும் அடங்கும்; அதில், உள்ளத்திற்கும் இடம் உண்டு. உள்ளும் தொழில் புரிவதால் அது 'உள்ளம்'. 'உள்ளத்தனையது உயர்வு' என்கிறது வள்ளுவம்; அதற்கு முன்னொட்டாய் 'மாந்தர்க்கு' என்று தனித்தும் உணர்த்திவிடுகிறது. 
    இன்னும் நுட்பமாய் விளங்கிக் கொள்ள, நம்மை நீர்நிலையின் முன் கொண்டுபோய் நிறுத்துகிறார் வள்ளுவர். நீரின் மட்டமும், மேல் மலர்ந்த மலர்களின் உயரமும் சமம். கரை உயர்ந்த நீர்நிலையில் கால் பங்குதான் நீர். 
    ஒருநாள் இரவில் பெய்த பெருமழையில் கரை தொட்டு நிறைகிறது குளம். அதனளவு உயர்ந்து சிரிக்கின்றன, அல்லியும், தாமரையும். 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று விளக்கிக் காட்டுகிறார் வள்ளுவர். 
    மலர்களைக் கைகாட்டிய வள்ளுவர் மானுடத்தை நோக்கி, மௌனமாக வினாத் தொடுக்கிறார்: 'உடல் உயரம் வளர்ந்த அளவிற்கேனும் உள்ளம் உயரவேண்டாமா?' 
    எத்தனை பெரிய பள்ளத்தில் அழுத்தப்பட்டுக் கிடந்தாலும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் மேவிவரும் கவிப் பெருக்கையும், கலைப்பெருக்கையும் உள்வாங்கிக் கொண்டால் உயரலாம் என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை. 
    இங்கே இன்னொரு உண்மையையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தத்தம் துறைசார்ந்த அறிவிலும் சிந்தனையிலும் மட்டுமே, ஒருவர் உயர்ந்திருந்தால் போதாது. பல்துறைசார் அறிவும் பக்கபலமாக, தத்தம் துறைசார் அறிவும் மிக்கு உயர்வதே வளர்ச்சி. 
    இன்றைக்கு அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்கள் அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. வாசிப்பில் இருந்து, படிப்பிற்கும், படிப்பில் இருந்து பெறும் படிப்பினை கற்றலுக்கும் உள்ளத்தை உயர்த்திக் கொண்டு வளர்வது ஒவ்வொரு மனிதர்க்கும் உரிய கடமை! 
    கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பார் என் தந்தையின் தோழர் ஒருவர். அவர் பண்டிதர் அல்லர்; ஆனால், எந்தப் பண்டிதரோடும் தர்க்கம் பண்ணக்கூடிய அளவிற்குக் கம்பனைக் கற்றவர்; வள்ளுவரை உள்வாங்கியவர்; காளமேகம்போல் அவ்வப்போது கவிபாடவும் வல்லவர்; கிடைத்தவற்றைப்படித்துப் பெற்றவற்றில் இருந்து தன்னறிவைத் தமிழறிவாக வளர்த்துக் கொண்டவர். 
    அவ்வாறு தான் கண்டதையெல்லாம் கற்றுக் கவிபாடினார் கண்ணதாசன். 'கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள் கதையைச் சொல்லுகிறேன்' என்று பாடிக் கதையும் எழுதிநிலைநின்றார் ஜெயகாந்தன். 

    இவர்கள் எல்லாம் பள்ளிக் கல்விகூட முழுமையாக முடிக்காதவர்கள். ஆனால் இவர்களது எழுத்துக்கள் இல்லாமல் பள்ளி தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரையிலான எந்தப் பாடப்புத்தகங்களும் உருவாவதில்லை.
    'கண்டது கற்றுப் பண்டிதன் ஆகலாம்' என்று படித்து அவ்வாறே பழகுகிற நாம், கற்கிறபோது இன்னும் வளரத்தொடங்குகிறோம்.
    படிப்பது வேறு; கற்பது வேறு. உதட்டளவில் நிகழும் வாசிப்பு மனதில் படியும்படி தொடர்வது படிப்பு; மனதில் படியும்படியாகப் படிக்கும் பழக்கம் வழக்கமாகி, அதன்வழி, வாழ்க்கையின் அங்கமாக வளர்வது கற்றல்; அத்தகையதே கல்வி.
    இப்போது 'கண்டது கற்கப் பண்டிதனாகலாம்' என்கிற பழமொழி புதுமொழியாகத் தெரிகிறது. 'கண்ணில் கண்டது (எல்லாம் எடுத்துக்) கற்கிற ஒருவன் பண்டிதன் ஆகலாம்' என்பது பழமொழி தரும் கருத்து.
    'கண்டு அது கற்கப் பண்டிதன் ஆகலாம்' என்கிறபோது அது புதுமொழி. அதாவது, கண்ணில் காணக் கிடைக்கிற அனைத்தையும் கண்டு புத்தக எல்லைகள் கடந்த எந்த உண்மையையும் எந்த முறையிலும் கண்டு - அதில் தனக்கு எது தேவை எனத் தேடிக் கண்டு, அது கற்றால் பண்டிதன்; பண்டிதன் என்றால், வெறும்பண்டிதத்தனத்தை மட்டும் அது குறிக்காது; தத்தம் துறையில் தகுதிசால் அறிஞர் என்பதையும் பெற்றுத்தரும் ஒரு சொல். 'கற்றிலன் ஆயினும் கேட்க' என்றும் கட்டளையிடுகிறார் வள்ளுவர். 
    'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையும் கல்லாத வாறு'
    என்றும் சாடுகிறார். 
    உலக அனுபவங்களை யெல்லாம் உள்வாங்கி, உலகம் உய்ய உயர்வழி காட்டிய வள்ளுவரின் வாசிப்புப் பயிற்சி, கற்றல் தவமாகிக் கற்பிக்கும் ஆசிரியர்கட்கெல்லாம் மேலான பேராசானாக உயர்த்தியிருக்கிறது. 
    அதுமட்டுமல்ல, மருத்துவர், பொறியாளர், பொருளியல் வல்லுநர், அரசியலாளர், அறிவியலாளர், ஆன்மிக, தத்துவப் பேராளர், இவர்களோடு எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத எல்லார்க்கும் 'எழுத்தறிவிக்கும் இறைவனாக' நிலை நிறுத்தியிருக்கிறதே! 
    அந்தவழி வந்து தத்தம் சொந்தத்துறைகளில் கால்பதித்துச் சரித்திரம் படைத்தவர்கள் எல்லாரும் வள்ளுவரின் சந்ததியர்தாமே!
    -
    சிகரம் விஸ்வநாதன்
    மக்கள் நூலகம்,
    கோவை.

    A call-to-action text Contact us