• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    *தவளை ஒரு குழியில் விழுந்து விட்டது. குதித்து கொண்டே அங்கு செல்லும் விலங்குகளிடம் உதவி கேட்டது.யாரும் உதவவில்லை*
    🐍 *அந்த வழியாக வந்த பாம்பு உணவு கிடைத்தது என்று குழிக்குள் சென்றது. தவளை பாம்பின் கழுத்தை இருக்கி பிடித்துகொண்டது. குழியை விட்டு பாம்பு வெளியே வந்தவுடன். தவளை தப்பித்துக்கொண்டது.மற்ற விலங்குகள் ஆச்சரியமாக கேட்டது எப்படி குழியில் இருந்தும் .பாம்பிடம் இருந்தும் தப்பித்தாய் என்று*
    🐸 *தவளை சொன்னது பாம்பு ஒரு நேர உணவுக்காக போராடியது நான் என் உயிருக்காக போராடினேன்*.
    🤦‍♂ *குழியில் விழுந்தது ஒரு பிரச்சனை. பாம்பு உள்ள வந்தது இரண்டாவது பிரச்சனை*
    🤔 *பிரச்சனையை வைத்தே பிரச்சனையை வென்று எடுக்க முடியும்*
    *பிரச்சனைகள் வர வர கடவுள் உங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் வைரத்தை பட்டை தீட்ட தீட்ட தான் அதன் மதிப்பு கூடிக் கொண்டே போகும்*
    🤷‍♂ *அது போலத்தான் நாமும் ஆதலால் *
     தலைவணங்கி சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள் பிரச்சனைகள் உங்களுக்கு தலை வணங்கும்*
    கோவையில் உலகப்புகழ் ஜாதுகர் மங்கள் மேஜிக் ஷோ
    மாயம் இல்லை... மந்திரம் இல்லை!

    மேஜிக்... இந்த 'மந்திரவார்த்தையைக் கேட்டாலே மனசுக்குள் ஓர் இனம் புரியாத சந்தோஷம் பரவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழிகள் விரியக் கண்டு களிக்கும் மந்திர உலகம் அது. அதிலும் ஜாதுகர் மங்கள் மேஜிக் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு குதூகலம்!
    சிறுமியின் தனியான தலை:
    ஒரு பெட்டியில் 12 வயது பெண் குழந்தையை நிற்க வைத்து விட்டு, பின்னர் ஒரு பெட்டியை தலையில் கவிழ்த்து வைத்து, பின்னர் ஒரு கத்தியால் கழுத்தோடு பெயர்த்து எடுத்து, கை உடல் அனைத்தும் அதே நிலையில் இருக்கும் போது, தலையை மட்டும் அடுத்த டேபிளில் எடுத்து வைத்து, அந்த சிறுமியை சிரிக்க வைத்த போது, பார்வையாளர்களிடம் பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்னர், அதே பெட்டியை தலையில் கவிழ்த்து, உடல் உள்ள டேபிள்மேல் வைத்து, தலையில் இருந்த பெட்டியை மட்டும் நீக்கியவுடன் அந்த சிறுமி, எழுந்து கையை அசைத்து வணங்கி விட்டு சென்றபோது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை. இதுபோல பல மேஜிக் சாகசங்களை செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது ஜடுகர் மங்கள் மேஜிக்.
    ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளையும், பெரியவர்களையும் கொண்டாட வைத்து, வியப்படைய வைத்தது என்றால் மிகை இல்லை.
    இந்த மேஜிக் கலை நிகழ்ச்சிகள், மே-18ம் தேதி தொடங்கியது, ஜூன் -10ம் தேதி வரை R.S.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி மற்றும் 7 மணி என்று இரண்டு காட்சிகள் நடைபெறுகிறது.  நுழைவு சீட்டுகள் அரங்கின் நுழைவு வாயிலிலும், www.bookmyshow.com, என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9884152200.








    சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...

    ``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

    ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

    அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

    மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
    அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

    அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’

    பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!
    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்அவர்கள்அவர்களுடைய தேவைக்க மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லைஅவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில்வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.
    அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும்நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாதுஇதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம்பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
    இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும்ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்அதுமட்டுமில்லாமல் தனது வேரைகுழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்இதனால் அனைத்துநிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள்அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
    இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளைகாப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்
    பனையை காப்போம்!  குளங்களை காப்போம் !

    விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் 

    கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வருகின்ற வெள்ளி(25.05.2018) அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.



          பிளஸ் 2 பொதுத்தேர்வில் 238 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் குறைவாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
          கடந்த ஆண்டு 94.5% தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 0.4% குறைந்துள்ளது. மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுடன் ஒப்பிடும் போது மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6.4% அதிகரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1907 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன.
           238 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது


    STEPS TO CHECK +2 RESULT 2018



    1. Log on to the official website: tnresults.nic.in
    2. Look for the link that says TN HSC Results 2018 or TN HSC +2 Result 2018
    3. Click on the link
    4. Enter your Tamil Nadu Board Class 12th roll number and date of birth
    5. Click on the submit button
    6. Result will appear on your screen
    7. Check and download it
    8. Take printout for future use

    *மன்னிப்பைப் பற்றி* மருத்துவம் சொல்வது

    'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.
    உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.
    அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.
    அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன, மருத்துவ ஆராய்ச்சிகள்.
    'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.
    'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது.
    எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
    ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.
    மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.
    மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
    மன அழுத்தத்தை குறைக்கும்.
    இதுவே காரணமாம்.
    இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.
    'ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.
    இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.
    'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.
    ஆனால் மதங்களைப் பின்பற்றும், நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?
    நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை, மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத் தன்‍மையை தெரிந்து கொள்ள முடியும்..
    மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.
    மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது, நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும், நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.
    மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால், பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.
    குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது, எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.
    அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு, நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.
    குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம், கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.
    பல வேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.
    கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.
    எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.
    அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.
    மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.
    ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.
    வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல.
    அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.
    உண்மையான அன்பு இருக்கும் இடத்தில், மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.
    மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.
    மன்னிப்புக் கேட்காதவர்களையும், மன்னிக்க மறக்காதீர்கள்.

    Suicide Counseling Centre Started in Ramanathapuram, Coimbatore

    Coimbatore Social Services Trust, Sigaram Foundation and Happy Minds Counseling centre jointly started a Suicide Counseling Center at Ramanathapuram to prevent the suicidal attempts of students of 10th and +2 who would feel upset, worry and loneliness
    When they see the results which is not as they expected.
    Managing Trustee of CSS Trust and the Counseling Psychologist of HAPPY MINDS Counseling Center Mr.K.Easwaran believes that some students who don’t get expected marks blame themselves and feel guilty and worry some and suddenly they decide to end their life.
    So, in order to save such type of suicidal thoughts students, the counseling is very much required. Please call us 7708663252, we will save a Childs life.



     தற்கொலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு இலவச ஆலோசனை மையம் கோவையில் துவக்கம்


    பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகளால் மாணவ-மாணவியர்கள் தனிமை, கவலை, மனஅழுத்தம், விரக்தி அடைவதைத் தடுக்ககோவையில் கோவை சமூக சேவை அறக்கட்டளை மற்றும்  ஹேப்பி மைண்ட்ஸ் ஆலோசனை மையம்  சார்பில் தற்கொலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மாணவமாணவியரும்பெற்றோரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இதில் குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவமாணவிகள் எதிர்மறை எண்ணம், கவலை, மனஅழுத்தம், மன விரக்தி அடைவதைத் தடுக்க கோவை சமூக சேவை அறக்கட்டளை முன் முயற்சி எடுத்துள்ளது.
    இது குறித்து கோவை சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகி திரு. ஈஸ்வரன் கூறியதாவது: எதிர்பார்த்த மதிப்பெண் பெறாதபோது  மாணவமாணவியர் இயல்பாகவே தனிமையுணர்வு, மனஅழுத்தம், விரக்தி, குழப்பம் போன்ற சூழலுக்கு தள்ளப்படுவர். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தைரியப்படுத்த வேண்டியது கட்டாயம். இதற்காக மாணவமாணவியருக்கான இலவச ஆற்றுப்படுத்துதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    உடனடி மனநல ஆலோசனைக்கு  7708663252 என்ற எண்ணை அழைத்து இலவசமாக ஆலோசனைகளைப் பெறலாம் என்றார்.


    A call-to-action text Contact us