• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இன்லேக்ஸ் சிவ்தாசனி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை


    இன்லேக்ஸ் சிவ்தாசனி உதவித்தொகை

    அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு இன்லேக்ஸ் சிவ்தாசனி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அறிமுகம்: 1976ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த உதவித்தொகை திட்டத்தில் சுமார் 76 லட்சம் ரூபாய் வரையில் தகுதியும், திறமையும் உள்ள இந்திய மாணவர்கள் பெறலாம்.

     

    கல்வி நிறுவனங்கள்: இம்பெரியல் காலேஜ் லண்டன், ராயல் காலேஜ் ஆப் ஆர்ட் - லண்டன், யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் மற்றும் சயின்சஸ் போ - பாரிஸ் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

     

    படிப்பு நிலைகள்: முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில்., மற்றும் பிஎச்.டி.

     

    துறைகள்: 

    பிசினஸ் மற்றும் பினான்ஸ்

    கம்ப்யூட்டர் சயின்ஸ்

    இன்ஜினியரிங்

    பேஷன் டிசிஅன்

    பிலிம் அண்டு பிலிம் அனிமேஷன்.

    ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் டூரிசம்

    இந்தியன் ஸ்டடீஸ்

    மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்

    மெடிசின், டென்டிஸ்ட்ரி மற்றும் அவை சார்ந்த தெரபி படிப்புகள்

    மியூசிக் 

    பப்ளிக் ஹெல்த்,

     

    உதவித்தொகை: கல்விக் கட்டணம், தங்குமிட செலவு, போக்குவரத்து செலவு, மருத்துவ காப்பீடு ஆகியவை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. 

     

    தகுதிகள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது கடந்த 6 மாத காலமாக  இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். 

     

    வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

     

    விண்ண்ப்பிக்கும் முறை: உரிய ஆவணங்களுடன் முற்றிலும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 

     

    தேர்வு செய்யப்படும் முறை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்த நபர்களுக்கு முதல்கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவர்களில் இருந்து இறுதிகட்ட நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

     

    விண்ணபிக்க கடைசி நாள்: மார்ச் 30

     

    விபரங்களுக்கு: www.inlaksfoundation.org

     


     

    A call-to-action text Contact us