வாஷிங் பவுடர் நிர்மா, வாஷிங் பவுடர் நிர்மா...
வீடுவீடாக வர்த்தகம் செய்து "" நிர்மா சோப்பு "" நிறுவனத்தை
மூன்றே மாதத்தில் அழிந்த 50 கோடி தேனீக்கள், அபாயத்தின் அறிகுறி! - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்
How do we change the world? One random act of kindness at a time.
இதை சொன்னவர் ஹாலிவுட்டின் புகழ்மிக்க நடிகர் மார்கன் ஃப்ரீமன். சொன்னதை செய்தும் காட்டியிருக்கிறார்.
தனக்கு சொந்தமான 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையை தேனீக்கள் வாழும் இடமாக மாற்றியிருக்கிறார்.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாகாணத்தில் இருந்து தேன்கூடுகளை தேனீக்களுடன் வாங்கி தனது பண்ணையில் வைத்து அவ்வுயிரினங்களுக்கு சர்க்கரை கரைசலை கொடுத்திருக்கிறார்....
சர்க்கரை கரைசல் தான் தேனீக்களுக்கு உணவு.
பதினாறு வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா என்று கமல் சொல்வார். ஆடு கோழியை வளர்த்து சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். அது போல நாய் வளர்ப்பவர்கள் பூனை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களின் செல்லப்பிராணி. ஆனால், மார்கன் ஃப்ரீமன் தேனீக்களை ஏன் வளர்க்கிறார்? காரணத்தையும் ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார்.
சூழலியல் ஆர்வலர்கள், மிக வேகமாக குறைந்து வரும் தேனீக்கள் பற்றி மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். தேனீக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார் மார்கன் ஃப்ரீமன்.
எவ்வளவோ உயிரினங்கள் அழிந்து வருகிறது, அவற்றைவிட தேனீக்களுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?
ஏனென்றால் தேனீக்கள் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையென்றால் விளைச்சல் இல்லை, விவசாயம் செழிக்காது.
தேனீக்கள் ஏன் அழிகின்றன?
பிரேசிலில் மட்டும் ஐம்பது கோடி தேனீக்கள் அழிந்திருக்கின்றன. மூன்றே மாதங்களில் நடந்த துயரம் இது. இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள். அந்த பூச்சிக்கொல்லிகளை உண்ட தேனீக்கள் கோடிக்கணக்கில் அழிந்துள்ளன. பிரேசில் ஒரு விவசாய நாடு. அதன் பொருளாதாரத்தில் 18% விவசாயத்தை சார்ந்தது. அங்கே பெரிய அளவில் தேனீக்கள் மரணமடைந்திருப்பது அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என கணிக்கப்படுகிறது.
உலகில் 20000 வகை தேனீக்கள் உள்ளன. அவை கூட்டமாக தேன்கூடுகளில் வாழ்பவை. ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்கு மட்டும் பயன்படுபவை.
குளிர் காலத்தின் தொடக்கத்தில் பெண் தேனீக்கள் ஆண் தேனீக்களை கொன்று விடும். ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு (Stringers) கிடையாது. எனவே உங்களை ஒரு தேனீ கொட்டினால் அது பெண் தேனீயாகத் தான் இருக்கும். அதே போல ஆண் தேனீக்கள் தேனை சேகரிப்பதுமில்லை, அதனால் மகரந்த சேர்க்கையிலும் ஈடுபடுவதில்லை.
இனப்பெருக்கம் தவிர்த்த வேறு எந்த பயனுமற்ற, ஆண் தேனீக்கள் தேவையில்லாமல் தேன் கூட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு உணவையும் உண்டு கொண்டிருத்தல் தங்களுக்கு உகந்ததல்ல என்று பெண் தேனீக்கள் நினைப்பது தான் ஆண் தேனீக்களை அழிப்பதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆண் தேனீக்களை கொன்றொழித்து விட்டு பல பெண் தேனீக்களை வேலைக்கார பெண் தேனீக்கள் வளர்க்கும். அவற்றிற்கு தேவையான போசாக்கான உணவையும் கொடுக்கும். அந்த தேனீக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு அந்தப் போரில் வெல்கிற ஒரு பெண் தேனீ ராணி தேனீயாக உருவெடுக்கும்.
பல பெண் தேனீக்கள் வேலைக்கார தேனீக்களாக வாழும். அவை தேனை சேகரிக்கும். அப்படி தேன் சேகரிக்கும் பொழுது மகரந்த சேர்க்கைக்கு துணை புரியும். அதன் மூலம் விவசாயம் செழிக்கும்.
அதனால் தான் ஐன்ஸ்ட்டின் சொன்னார், "தேனீக்கள் அழிந்துவிட்டால் அடுத்த நான்காண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்".
இதை உணர்ந்த மார்கன் ஃப்ரீமன் தேனீக்களை வளர்க்கிறார். அதே போல மற்றவர்களும் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.
குறைந்த பட்சம் தேனீக்களை கொல்லும் உரங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால் பெரிய சீரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இந்தியா போன்ற விவசாயத்தை நம்பியிருக்கும் நாடுகளில் தேனீக்களின் மரணம், வரப்போகும் அபாயத்திற்கு அறிகுறி.
40 ஆண்டுகளாக தண்ணீர் பம்ப் தயாரிப்பில் 100 கோடி வருவாயுடன் கோலோச்சும் கோவை நிறுவனம்!

ஆறுமுகத்தின் மாமா, கே.கே.வேலுசாமி, பம்ப்களுக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையைத் துவங்குமாறு ஆலோசனை கூறவே, 1981ல், இவர்கள் இருவரும், எம்.எஸ்.சுந்தரம் என்பவருடன் இணைந்து டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம், 9 ஊழியர்களுடன், சிறிய அளவில், விவசாயிகளுக்கான சப்மர்சிபில் பம்ப்களை தயாரிக்கத் துவங்கியது.
மெல்ல நிறுவனம், ஜெட் பம்ப், சபம்ர்சிபிள் மோட்டார், போர்ஹோல் சப்மர்சிபில்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளில் விரிவாக்கம் செய்தது.

ஆறுமுகம் இந்த குழுமத்தை முழுவதுமாக வாங்கி, தனி உரிமையாளரான நிலையில், நிறைய மாற்றங்களை சந்தித்து, ஹோல்டிங் நிறுவனமாக EKKI குழுமம் உண்டானது. இதில், Deccan Pumps, Deccan Enterprises, EKKI HOMA , EKKI Pumps உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கம் வகித்தன.
இந்த மாற்றங்கள், 2013ல் நிகழ்ந்தன. இன்று, நிறுவனம் ஆறுமுகம் மற்றும் அவரது மகன் கனிஷ்கா ஆறுமுகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நிறுவனம், பம்ப் உற்பத்தியாளர் என்பதில் இருந்து, தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகி இருப்பதாக இவர் கூறுகிறார்.
நிறுவன சி.இ.ஓவவான கனிஷ்கா, வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, போர்ப்ஸ் மார்ஷல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, 2015ல் தாயகம் திரும்பி குடும்பத் தொழிலில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தண்ணீர் தொழில்நுட்பம்
பம்ப் தயாரிப்பில் நீண்ட காலம் இருந்த நிலையில், EKKI இப்போது, தூய்மையான தண்ணீர் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார வசதியில் கவனம் செலுத்த இருப்பதாக கனிஷ்கா கூறுகிறார்.
நகரமயமாக்கல், தண்ணீர் பற்றாக்குறை, எரிசக்தி பற்றாக்குறை, உலகமயாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவறை இதற்கான காரணம் என்கிறார். தண்ணீர் தொழில் மாறுவதற்கு ஏற்ப பம்ப்களும் மாற வேண்டும் என்கிறார்.
ஜெர்மனி தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமான, HOMA Pumpenfabrik GmbH, நிறுவனத்திடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் EKKI HOMA எனும் கூட்டு நிறுவனம் உண்டானது. இந்நிறுவனம், இந்தியாவிற்கு கழிவு நீர் அமைப்பு தீர்வுகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கழிவுநீர் பம்புகளுக்கான உற்பத்தி ஆலை 2019ல் அமைக்கப்பட்டது.
இந்த கூட்டு நிறுவனம், இந்திய பொறியியல் ஆற்றலுடன், ஜெர்மனி தொழில்நுட்பத்தை இணைக்கிறது என்கிறார் கனிஷ்கா.
தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, நிறுவனம், EKKI International Water Technology Centre (EIWTC) மையத்தை, டாக்டர்.மகாலிங்கம் காலஜ் ஆப் இஞ்சினியரிங் & டெக்னாலகி மற்றும் கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் அமைத்துள்ளது.
“நவீன கால நுகர்வோர், ஜெர்மனி பொறியியல், ஜப்பானிய தரம், இத்தாலிய நேர்த்தி, அமெரிக்க மார்க்கெட்டிங், சீன விலை மற்றும் இந்தியாவின் விருந்தோம்பல் இணைந்த தயாரிப்பை எதிர்பார்க்கின்றனர்,” என்கிறார் கனிஷ்கா.
சர்வதேச அளவில் போட்டித்திறனுடன் விளங்க, விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறுகிறார். குடும்பத்தொழிலாக இருப்பதால், மார்கெட்டிங்கில் முதலீடு செய்ய தந்தை மற்றும் இயக்குனர் குழு மூத்த உறுப்பினர்களை சம்மதிக்க வைப்பது சவாலாக இருக்கிறது என்கிறார்.
தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் 2016 ல் நிறுவனம் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்தது.
நீடித்த வளர்ச்சி
இந்திய பம்ப் சந்தை, 2021-26 ஆண்டுகளில் ஆண்டுக்கு 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என ரிப்போர்ட் லிங்கர் தெரிவிக்கிறது. இது 1.51 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஎஸ்பி பம்ப்ஸ், ரோடோ பம்ப்ஸ், கிர்லோஸ்கர் பம்ப்ஸ், ஹேவல்ஸ் உள்ளிட்டவை இந்தியாவிலும் முத்திரை பதித்திருந்தாலும், தண்ணீர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் EKKI தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது.
INSEAD Business School, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை தனது எம்பிஏ பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. குழுமத்தின் வளர்ச்சி நீடித்த நிலையான வளர்ச்சி தொடர்பான விழிப்புணர்வுடனும் இணைந்திருப்பதாக கனிஷ்கா கருதுகிறார்.
குறைந்த எரிசக்தியில் அதிக தண்ணீர் என்பது எதிர்காலத் தேவையாக இருக்கும் என்கிறார். இண்டெர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனல்டிக்ஸ் போன்றவை மூலமே இது சாத்தியம் என்பவர், தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்த துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்.

தற்போது, விவசாயம், கட்டுமானம், பொது பயன்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு நிறுவனம் சேவை அளித்து வருகிறது. அனைத்து பாகங்களும் நிறுவனத்தாலேயே சொந்தமாக தயாரிக்கப்படுகின்றன.
“நாங்கள் இந்தியாவில் முழுவதும் உற்பத்தி செய்யும் பிராண்டாக இருக்கிறோம். வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை எல்லாவற்றையும் சொந்தமாக செய்கிறோம். இதன் மூலம் சப்ளை சைன் மற்றும் தரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடிகிறது,” என்கிறார்.
நிறுவனம் கோவையில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இதன் இயந்திரங்கள் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நிறுவனத்தில் 550 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மொத்த வருவாய் ரூ.100 கோடியாக இருக்கிறது.
மாற்றம்
நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. துவக்கத்தில் நிதி பெறுவது பெரும் சிக்கலாக இருந்ததாக கனிஷ்கா கூறுகிறார். இன்றைய சவால்கள் வேறு விதமாக இருக்கின்றன.
“அடுத்த தலைமுறை மிகவும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். புதுமையாக்கம் மற்றும் மாற்றம் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியாது,” என்கிறார்.
கொரோனா பாதிப்பு பற்றி குறிப்பிடும் போது, “கடந்த ஆண்டு திட்டமிட்டிருந்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. பொதுமுடக்கத்தின் போது ஒரு மாத விற்பனை பாதிக்கப்பட்டது. எனினும் பொதுமுடக்கத்திற்கு பின் விற்பனை சீரானது,” என்கிறார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், முழுமையாக தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனமாக மாற விரும்புவதாகக் கூறுகிறார். இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் அதிக டீலர்களை பெறவும் திட்டமிட்டுள்ளது.
RESULT - NATIONAL LEVEL DRAWING COMPETITION 2021
“The will to win, the desire to succeed, the urge to reach your full potential…
these are the keys that will unlock the door to personal excellence.”
“Be thankful for quality competitors who push you to your limit.”
Congratulations for Winners and Participants