கோர்ட் உத்தரவை தொடர்ந்து, கோவையில் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணியில், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், ரோடு சந்திப்புகள் மற்றும் ரோட்டோரங்களில், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறி, நகர்ப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பிளக்ஸ் பேனர்களும், விளம்பர பதாகைகளும் வைக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ்களை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல் கட்சிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.இதையடுத்து, கோவையில் ஆங்காங்கே உள்ள பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும், மீண்டும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. அதை தடுக்க, கட்டடங்களின் மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்களையும் கழற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
விதி மீறினால் சிறை உறுதிநகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால், ஓராண்டு சிறை அல்லது, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றனர்
போக்குவரத்துக்கு இடையூறாக, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், ரோடு சந்திப்புகள் மற்றும் ரோட்டோரங்களில், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறி, நகர்ப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பிளக்ஸ் பேனர்களும், விளம்பர பதாகைகளும் வைக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ்களை அகற்ற, அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல் கட்சிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.இதையடுத்து, கோவையில் ஆங்காங்கே உள்ள பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும், மீண்டும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. அதை தடுக்க, கட்டடங்களின் மேற்கூரையில் வைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்களையும் கழற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
விதி மீறினால் சிறை உறுதிநகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால், ஓராண்டு சிறை அல்லது, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றனர்