தமிழ்நாடு மாநில எல்லை வரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சியில், மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளின் எல்லைகள் குறித்த அறிவிப்பு, மாவட்ட சிறப்பு அரசிதழில் கடந்த டிச.,14ல் வெளியிடப்பட்டது.
இது குறித்த மாவட்ட சிறப்பு அரசிதழ் அறிவிப்பு, பொதுமக்கள் பார்வைக்காக கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ஹரிஹரன் கூறியுள்ளார்.