9,143 கோடி சொத்து.. இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் கோவை தொழிலதிபர்! யார் இந்த கே.பி. ராமசாமி?
அந்தப் பெயருக்கு சொந்தக்காரர் நமது கோயமுத்தூர்காரர் என்பது
உங்களுக்கு தெரியுமா?. யார் அவர், அவரின்
பிண்ணனி என்ன?, எப்படி இந்தியாவின் 100 பணக்காரர்களில்
ஒருவராக இடம் பிடித்தார்? என்பது குறித்த சுவாரசிய தகவல்களை இங்கு
உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
9,143 கோடி சொத்து.. இந்தியாவின் 100 பணக்காரர்கள்
பட்டியலில் கோவை தொழிலதிபர்! யார் இந்த கே.பி. ராமசாமி?
இந்தியாவின்
பணக்காரர்கள் யார் என கூகுள் செய்தால், அம்பானி, அதானி
பெயர்கள் வரும். ஆனால் தற்போது நமது தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த
ஒருவரது பெயரும் இந்த வருடத்திற்கான இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில்
இடம்பெற்றுள்ளது.
ஃபோர்ப்ஸ்
பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியல்:
ஆண்டுதோறும்
நாடு முழுவதும் உள்ள 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை
வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள்
பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி
முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும், சிவ்
நாடார் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
புதிதாக இணைந்த ஒரு பெயர்:
எப்பொழுதும் நாம் வழக்கமாக பார்க்கும் அம்பானி, அதானி பெயர்களுடன் சேர்த்து நமது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது பெயரும் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது.
கேபிஆர்
மில்ஸ்:
கோவையில் அமைந்துள்ள ராமசாமியின் கே பி ஆர் மில், சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி, பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல்களை உற்பத்தி செய்து வருகிறது.
யார்
இந்த கோயமுத்தூர்காரர்?
விவசாய
குடும்பத்தில் பிறந்து 1984 இல் கே.பி.ஆர். மில்ஸ் என்ற பெயரில் தனது தொழிலை
துவக்கியவர், ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும்
கேபிஆர் மில்ஸ் நிறுவனத் தலைவர் கே.பி. ராமசாமி.
தனது
தொழிலை படிப்படியாக விரிவுபடுத்தி 2013 ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி தொழிலில் காலடி
எடுத்து வைத்து, 2019 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான இன்னர் வேர் பிராண்டான
ஃபாசோவை (Faso) அறிமுகம் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
சாதனைகள்:
கேபி ஆர் இன்ஸ்டியூட் மற்றும் அறக்கட்டளை:
இது மட்டுமல்லாமல் கே.பி ராமசாமி, கேபி ஆர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மூலம் கல்வியை வழங்க கேபிஆர் அறக்கட்டளை என்ற பொது அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
கோ-ஜென்
கம் சுகர் பிளான்ட்:
கேபி ராமசாமி தமிழ்நாட்டில் பல காற்றாலைகளை நிறுவியதாகவும், கர்நாடகாவில் பசுமை மின்சாரத்தை வழங்குவதற்காக கோ ஜென் கம் சர்க்கரை ஆலையை நிறுவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
நிறுவனத்தில்
பணிபுரியும் 90% பேர் பெண்கள்:
கோவை மட்டுமல்லாது ஈரோடு மாவட்டத்திலும் கே பி ஆர் மில்ஸ் துவங்கப்பட்டு சமீபத்தில் ஆண்டுக்கு 42 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. இவரின் நிறுவனத்தில் பணிபுரியும் 90% பேர் பெண்கள் என்பது ஹைலைட்டான விஷயம்.
இந்தியாவின்
100 பணக்காரர்கள் பட்டியலில் கோவை தொழிலதிபர்:
இந்த
நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பணக்காரர்கள்
பட்டியலில் 2.3 பில்லியன் டாலர், அதாவது
9.143 கோடி சொத்து மதிப்புகளுடன் நூறாவது இடத்தை
பிடித்துள்ளார் கே.பி. ராமசாமி.