புகைப்படத்துறையில் மென்பொருட்கள் பயன்பாடு - செயல்முறை பயிற்சி பட்டறை
SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினிஅறிவியல் துறை சார்பில் "Adobe Software and Photography " "புகைப்படத்துறையில் மென்பொருட்கள் பயன்பாடு - செயல்முறை பயிற்சி பட்டறை"எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் போ .சுப்பிரமணி அவர்கள் தலைமை வகித்தார். கணினிஅறிவியல் துறைத் தலைவர் கே.தமிழ்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இம்பிகர் டெக்னாலஜி நிறுவன தொழில்நுட்ப புகைப்பட வல்லுநர் சியாம் மணிராஜ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு புகைப்படங்களின் தொழில்நுட்ப அடிப்படைகள், நவீன புகைப்பட மென்பொருளை பயன்படுத்தும் முறைகள், புகைப்படத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து இப்பயிற்சி பட்டறையில் செயல்முறை விளக்கம் தரப்பட்டது.
நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.