• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    சமுதாய குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் கவசம் அமைப்பு



     
    கோவையில் தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர காவல்துறை சார்பாக கவசம் பவுண்டேஷன்என்ற அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
    சாலை விபத்து மற்றும் பாலியல் வழக்கு, கொலை, தற்கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று வரும் குற்றவாளிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் குழந்தைகள், கல்விச் செலவு உள்பட பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.









     
    இதுபோல் பாதிக்கபட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு உதவும் விதமாகவும் துவங்கபட்டது தான் கவசம் பவுண்டேஷன். இதில் தனியார் மூலம் நன்கொடைகள் பெற்று அதன் மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.







    முதற்கட்டமாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை 25 குடும்பங்களுக்கு வழங்கினர்.
    இந்த விழாவில் காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், கோவை மாநகரில் சமுதாய குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவசம் பவுண்டேஷன் சார்பாக பொருள் மற்றும் கல்விக்கான உதவி செய்யப்பட்டு வருகிறது.












    கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ மற்றும் பாலியல் வழக்குகள் 75, தற்கொலை வழக்குகள் 797 பதிவாகியுள்ளது. மேலும் இந்த சம்பவங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு அதன் மூலம் தற்கொலை நடைபெறுவது அதிகரித்து வருகிறது. விபத்துகளை பொறுத்தவரை 269 விபத்துக்களும், 25 முதல் 30 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.








    வருங்காலத்தில் இந்த குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் குடும்பங்களுக்கு உதவும் ஒரு நல்ல நோக்கத்திலேயே இந்த கவசம் பவுண்டேஷன் துவக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
    மேலும் பாதிக்கபட்டவர்கள் யார் யார் என்ற புள்ளி விவரங்கள் அடிப்படையில் காவல்துறை சார்பில் ஆராய்ந்து, கணக்கிட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.











    மேலும் பாதிக்கபட்டவர்களுக்கு மன ரீதியான ஆலோசனை தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை அல்லது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.




















    கோவை மாவட்ட நிர்வாகம், காவல் துறையினருடன் இணைந்து இந்த நல்ல தொடக்கத்தை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவையை பொறுத்தவரை மனிதாபிமானிகள் அதிக அளவில் உள்ள நகரம் அரசு திட்டங்கள் சில காலம் காலதாமதம் ஆனாலும் அதனை முறையாக செய்து கொடுத்து வருகிறோம் என்றார். மாவட்ட நிர்வாகம் சார்பாக பாதிக்கபட்ட மாணவர்களுக்கு சிறப்பு திட்டமும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிட்டார்.

    கே.ஐ.டி கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

    கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) சிறந்த ஆசிரியர் விருதுஎன்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.



    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகையில்: ஆசிரியர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு முதலில் தங்களை நேசிக்க வேண்டும். அடுத்தவரின் பிம்பத்தை பின்பற்றி அவ்வாறு செயல்பட்டு நாமும் முன்னேற வேண்டும் என்பதை நினைத்துவிட்டு, தம்மால் முடிந்ததை வைத்துக் கொண்டு வெற்றி பெற சிந்திக்க வேண்டும்.



    பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவையும், அன்பையும் ஆசிரியர்கள்தான் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் கவனச்சிதறல், சமூக ஊடகம் போன்ற தவறான பழக்கத்தை கைவிட வேண்டும் என எண்ணும்போதே, மற்றொரு நல்ல பழக்கத்தை அதற்கு மாற்றாக தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

    மேலும், ஒவ்வொரு நாளும் காலையில் நல்ல உடல் நலம் சார்ந்த மனநிலையில் இருக்கும் செயலை தேர்வு செய்யுங்கள். அதுவே அன்றைய நாள் முழுதும் உங்களுக்கு செயல் திறனை அளிக்கும். கடைசி வரை நீ, நீயாகவே இரு அடுத்தவர்களுக்காக வாழ்வதை விட்டு விட்டாலே 100 சதவீதம் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 510 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    A call-to-action text Contact us