• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES


    கோவையில் ஒரு கல்விக் கோயில்!

    கோவை நகரின் முக்கியப் பகுதியான கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில். கரிகால்சோழன் கட்டிய அழகிய ஆலயம் இது.
    புராதனப் பெருமை கொண்ட இந்தக் கோயிலில், தட்சிணாயனம் மற்றும் உத்தராயனம் ஆகிய காலங்களுக்கான இரண்டு வாசல்கள் உள்ளன. அதேபோல், சொர்க்க வாசல் உள்ள கோவைக் கோயில்களில் இதுவும் ஒன்று, என்கின்றனர் பக்தர்கள். தற்போது பாதுகாப்பு கருதி கதவு சார்த்தியே வைக்கப்பட்டுள்ளது.
    இங்கு தாயாரின் திருநாமம்- ஸ்ரீமகாலட்சுமித் தாயார். கருணையும் கனிவும் கொண்டு, தன்னை நாடி வரும் பெண்களுக்குத் திருமண வரம் தரும் தேவி இவள், எனப் போற்றுகின்றனர் பெண்கள்.
    அசுரர்களை அழித்து, அவர்களிடம் இருந்து வேதச் சுவடிகளைக் கைப்பற்றி, கலைவாணியிடம் தந்தருளினார் ஸ்ரீஹயக்ரீவர். அவருக்கும் இங்கே சந்நிதி உண்டு. இங்கே… இவருக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன.
    ஸ்ரீலக்ஷ்மிதேவியைத் தாங்கியபடி இருப்பதால், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். புதன்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரை வணங்கித் தொழுதால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை, திராட்சை மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால், கல்வி ஞானம், ஞாபக சக்தி ஆகியவை அதிகரிக்கும்.
    வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில், இந்தக் கோயிலில் ஸ்ரீசுதர்சன ஹோமமும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமமும் பிரமாண்ட மாக நடைபெறும். அப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே அழைத்து வந்து, ஸ்வாமி தரிசனம் செய்து, ஹோமத்திலும் பங்கு பெறுகின்றனர். இந்த நாளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தங்கள் பெயர், தேர்வு பதிவு எண், நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியவற்றைக் காகிதத்தில் எழுதி, உத்ஸவருக்கு அருகில் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
    இதனை தினமும் காலையில் 12 முறை சொல்லிவிட்டு ஸ்ரீஹயக்ரீவரை வணங்கினால், கல்விச் செல்வம் குறைவறக் கிடைக்கும் என்பது ஐதீகம்.


    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!

    வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இதனை கடைப்பிடிக்கிறார்கள். பலர் இதனை கடைப்பிடிப்பதில்லை. நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன.
    ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், ஆண்கள், நடுத்தர வயதினர், முதியோர் என அனைவருக்கும் சரிவிகித உணவு அவசியமாகிறது.
    கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது. இது தங்கமான நிறத்தை சருமத்திற்கு தருகிறது. இதன் மருத்துவ பலன்களை இந்த பகுதியில் காண்போம்.
    1. உடல் எடை குறைய
    உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
    2. உடல் எடை அதிகரிக்க
    பொன்னாங்கன்னி கீரை உடல் எடையை அதிகரிக்க மட்டுமில்லாமல் கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது பொன்னாங்கண்ணி கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும்.எலும்புகள் உறுதியாகும்.
    3. வாய் துர்நாற்றம் போக
    வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.
    4. சுறுசுறுப்பாக செயல்பட
    பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.
    5. குணப்படுத்தும் நோய்கள்
    பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
    6. கண் பார்வை
    பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.
    7. இரத்தம் சுத்தமாக..
    பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.
    8. கண் சிவத்தல் நீங்க
    இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.
    9. பொன்னிறமாக மாற
    பொன்னாங்கன்னி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்த கீரையை சாப்பிட்டால் அழகு மேம்படும்.
    10. வீட்டிலேயே வளர்க்கலாம்
    பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.
    அனைவருக்கும் பகிருங்கள். பல அழகு, மருத்துவ பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்!



    5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர்.

    யோகா பலன்கள்:


    முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டிவிபார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும்.

    யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

    இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.

    உளவியல் ரீதியாக மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

    மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் வகைகளை விட்டுவிட வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின் வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது.


    A call-to-action text Contact us