• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    "தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,
    " தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!

    "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!

      "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!

    "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!

    "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.

    "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!

    இருந்தும் கோபம் தாளாமல்.....,

      "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.

    "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!

    "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
    "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!

    அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.

    உடனே...,
      " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,

      " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!

    மற்ற நாய்களும் குமயங்கியது

    " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,

    " வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!

    "இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!

    "இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,
    அதற்கு புரிந்திருக்கும்.
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    1. தான் நுழைந்தது....,
    " நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,

    2. தன்னை சுற்றி இருந்தது........,
    " தனது பிம்பங்கள் தான் என்று"....,

    3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
       "தன் குரலின் எதிரொலி தான் என்று"......,

            நீதி:
             ```````
      "இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!
     
    நாம் கோபப்பட்டால்....,
    " பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!

      அன்பு செலுத்தினால்.....,
        " அன்பு கிடைக்கும்"......!!

    "நீ எதை விதைக்கிறாயோ"....,
      "அதுவே முளைக்கும்"...!!

         

    கோயம்புத்தூரில் ஒரு மனித சேவை செம்மல்- திரு பி.சுப்ரமணியம் அவர்கள்
    கோவை ஒண்டிப்புதூர் -ஐ சேர்ந்த திரு பி.சுப்ரமணியம் என்னும் இளைஞர் – 1960 களில் தனது டிப்ளமோ படிப்பை கோவையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான PSG பாலிடெக்னிக்-ல் படித்து முடித்து சிலவருடங்கள் அந்த நிறுவனத்திலேயே ஆசிரியராக பணி புரிகிறார். அவருக்கு இது எனது வேலை இல்லை என்ற எண்ணம் மனதில் ஓடியதின் விளைவு 1969-ல் சாந்தி இன்ஜினியரிங் அண்ட் டிரேடிங் கம்பெனி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தி இயந்திரங்களுக்கு தேவையான கியர் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிலை துவங்குகிறார்.
    அப்பொழுது இந்த உலகத்துக்கு தெரியாது, தனது தொலைநோக்கு பார்வையால் தொழில் உச்சம் தொட போகிறார், இந்த உலகத்தை தன்பக்கம் திருப்பப் போகிறார் என்பது. 1969 இல் துவங்க பட்ட இந்த சிறிய நிறுவனம், மிகப்பெரும் வகையில் வளர்ச்சியடைந்து, ஒரு காலகட்டதில் கியர் உதிரிபாக உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தது, பின்னர் உதிரிபாகத்தில் இருந்து முழுமைபெற்ற கியர் பாக்ஸ் தயாரிப்பில் இறங்கி உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
    2016 ஆம் வருடம் சுமார் 172 கோடி ரூபாய்களை விற்பனையாக பதிவு செய்துள்ளது. கியர் பாக்ஸ் தயாரிப்பில் ஜெர்மனியர்களையும், இத்தாலி நாட்டவரையும் வியக்க வைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைக்கு கோவையில் கியர் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைந்துவழிவதற்கு மூல கர்த்தாவே திரு பி.சுப்ரமணியம் தான். ஒன்று இவரிடம் வேலை பழகி வெளியில் சென்று தொழில் துவங்கி இருப்பார்கள் அல்லது இவரால் தொழில் அமைத்து கொடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
    இன்றைக்கும் படித்து தொழில் துவங்கும் பொறியாளர்கள், சுயமாக துவங்கி இருந்தாலும், சாந்தி கியர் என்கிற மாபெரும் நிறுவனத்தில் ஒரு சில ஆண்டுகளாவது பணியாற்றி இருப்பார்கள் அல்லது அங்கு பணிபுரிந்த திறமையான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
    திரு பி. சுப்பிரமணியத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், அன்றைய காலகட்டத்தில் ஒரு இயந்திரத்தை வாங்கி அதன் கியர் பாக்ஸ் கெட்டுப்போய் விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் அந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தை தொடர்புகொள்கிறீர்கள், அவர்களது பதில் கியர் பாக்ஸ் வேண்டும் என்றால் மூன்று மாதங்கள் ஆகும் என்பதுதான்.
    திரு பி. சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டு தங்கள் நிலையை எடுத்துக்கூறி, இந்த இயந்திரம் இயங்காவிட்டால் மிகப்பெரும் நட்டம் ஏற்படும், தொழிலாளர் வேலை இழப்பார்கள் என்றால், அந்த இயந்திரத்திற்கான கியர் பாக்ஸ் பத்து நாட்களில் தயாரித்து வழங்கப்படும், இதுதான் திரு பி.சுப்ரமணியம்.
    சமீப வருடங்களில் புகழ் பெற்ற முருகப்பா குரூப் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தனது குடையின் கீழ் கொண்டு சென்றுள்ளது.
    சரி தொழில் துவங்கினர், உழைத்தார், வளர்ந்தார்.. அது ஊக்கம் உள்ளவர்கள் எல்லோரும் செய்யும் செயல்தான், இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
    வாருங்கள் அவரது மறுபக்கத்தை பார்ப்போம்...
    1996 ஆம் ஆண்டு தனது லட்சியமான சாந்தி சோசியல் சர்விஸ் (கோவை மக்களுக்கு சுருக்கமாக SSS ) என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தை தனது மனைவியார் திருமதி சாந்தி அவர்களது பெயரில் ஆரம்பிக்கிரார். இந்த நிறுவனம் என்ன செய்யப்போகிறது, என்பதை மிகவும் தெளிவாகவும், ஒரு தேர்ந்த தொழில்முறை வல்லுனரைப்போன்று SSS-ன் சேவைகளை வடிவமைத்துள்ளார்.
    1. சாந்தி பெட்ரோல் பங்க்: ( April 14th, 2005.)
    2005 - இல் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மற்ற நிறுவனங்கள் வழங்க யோசித்த சேவைகள் 2005 இல் இருந்து இன்றுவரை தொடர்ந்து வழங்குகிறார்கள்.
    1. வாகனங்களுக்கு இலவச காற்று (இந்த சேவைக்காக ஒவ்வொரு கற்று நிரப்பும் இயந்திரத்திற்கும் தனி பணியாளர் நியமிக்க பட்டுள்ளார் )
    2. நான்கு சக்கர வாகனங்களுக்கு, முன் பின் கண்ணாடிகள் இலவசமாக சுத்தம் செய்யப்படுகிறது.
    3. HEADLIGHT ஸ்டிக்கர்ஸ் இலவசமாக ஓட்டுவது
    4. இரு சக்கர வண்டிகளுக்கு ஆயில் மீதான சேவை வரி கிடையாது
    5. சுத்திகரிக்கப்பட்டகுடி தண்ணீர்
    6. மிக சுத்தமான கழிவறைகள்
    7. ஷு துடைக்கும் இலவச இயந்திரசேவை
    இது மட்டும் இல்லை, மிக துல்லியமான, கலப்படம் அற்ற பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது. கோவை மாநகரின் மிகசிறந்த எரிபொருள் நிரப்பும் நிறுவனமாக நாள் ஒன்றுக்கு 15000 வாகனங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது.
    இந்திய அரசு உயர் பணமதிப்பு இழப்பு அறிவித்த நாட்களில் நபர் ஒருவருக்கு ரூபாய் 2000 வரை தக்க ஆவணத்தோடு பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்து சிறந்த சேவையை ஆற்றியது. வங்கிகளில் தங்கள் பணத்தை மாற்றுவதற்கு நாள் முழுவதும் வரிசையில் நின்றவர்களுக்கு சென்ற 15வது நிமிடம் புதிய நோட்டுகளாக மாற்றிவிட்டு போக முடித்து. இந்த சேவை இரவு ஒன்பது மணிவரை நடந்தது.
    2. சாந்தி மருந்தகம் - October 4th, 2006.
    தரம் வாய்ந்த கம்பனிகளின் மருந்துகள் மட்டுமே விற்பனை செய்ய படுகிறது. அனைத்து மருந்துகளுக்கும் 15 சதவீத தள்ளுபடி , மேலும் விற்பனை வாரியான 5 சதவீதத்தை நிறுவனமே செலுத்தும். நீங்கள் தொடர்ந்து வாங்குபவர் என்றால் , உங்களுக்கு இலவசமாக தேவையான மருந்துகள் உங்கள் இல்லம் தேடிவரும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு களுக்கு சேவை வரி கிடையாது. நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
    3. பரிசோதனை நிலையம் - November 22nd, 2007.
    எக்ஸ் ரே , இசிஜி , ஸ்கேன், ரத்த பரிசோதனை, மாஸ்டர் ஹெல்த் செக்-அப் போன்றவை மற்ற மருத்துவமனைகளை விட 50 இல் இருந்து 70 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் செய்யப்படுகிறது. CT ஸ்கேன் போன்ற சேவை ரூபாய் 750 இல் இருந்து ஆரம்பிக்கிறது. காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
    4. சாந்தி மெடிக்கல் சென்டர் - April 14th, 2010.
    1. ஏறக்குறைய 63 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் அதில் 36 மருத்துவர்கள் MD பட்டம் பெற்றவர்கள்.
    2. மருத்துவரை சந்திப்பதற்கான ஒருமுறை பதிவு கட்டணமாக முப்பது ரூபாயும், மருத்துவருக்கான கட்டணமாக ரூபாய் முப்பதும் செலுத்தவேண்டும். ( 10 நாட்கள் நீங்கள் இலவசமாக மருத்துவரை பார்க்கலாம்)
    3. காலை மணி 8 இல் இருந்து மாலை 9 மணிவரை இந்த சேவை வழங்க படுகிறது.
    4. இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்க படுகிறது
    5. இரத்த அழுத்தம் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது
    5. சாந்தி கேன்டீன் - 20th August 2010
    முழுவதும் சேவை நோக்கத்தோடு செயல்படும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் சுத்தத்தை பார்த்தால் அசந்து போவீர்கள். சென்னை சரவணபவனுக்கு நிகரான ஒரு சுத்தத்தை பார்க்கமுடியும். காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் உணவு சேவை இரவு 9.30 மணி வரை எல்லா நாட்களிலும் செயல் படுகிறது. இரண்டு இட்லிகளின் விலை ஐந்துரூபாய் , தோசை ஐந்துரூபாய், பூரி 2 கொண்டது பத்துருபாய் இப்படி மிக குறைந்த விலையில் தரமான, ருசியான,சுகாதாரமான உணவு சேவை . சாப்பிட வருபவர்கள் யாராக இருந்தாலும் டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையில் சென்று சாப்பிட வேண்டும். இன்றைய மதிய சாப்பாட்டின் விலை ருபாய் 20 மட்டுமே. அளவுகிடையாது (விலை 5 ருபாய் குறைத்துவிட்டார்கள் ), சப்பாத்தி, குருமா, சாதம், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர்,பொரியல், கீரை, ஊறுகாய் இவை அனைத்தும் சுத்தமான தட்டுகளில் சுத்தமான மேசையில் அமர்ந்து சாப்பிடலாம்.
    இட்லி, தோசை வகைகள், கிச்சடி, சாதவகைகள் , பூஸ்ட், ஹார்லிக்ஸ், பால் போன்றவையும் இரவுநேரத்தில் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது, இதை தவிர மூலிகை சூப், டீ, காப்பி பழச்சாறு போன்றவையும் வழங்க படுகிறது. இங்கு தினசரி உணவு உண்பவர்களின் எண்ணிக்கை சுமாராக 15000- தை தாண்டுகிறது. இந்த அமுத சேவையை எப்படி பாராட்டலாம் நண்பர்களே? உங்களுக்கு வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை கோவை SSS -கு வருகைபுரிந்து உண்மையான சேவையை புரிந்து கொள்ள அழைக்கிறேன்....
    6. சாந்தி இலவச எரிவாயு தகன மேடை :(March 16th, 2011.)
    இறந்தவர்களை தகனம் செய்ய இலவசமாக அமைத்து கொடுத்துள்ளார்கள்.
    7. Dialysis Services -16th August 2013.
    'இங்கு டயாலிசிஸ் - செய்துகொள்ள ஒரு முறைக்கு 350 முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
    இதை தவிர ரத்த வாங்கி, கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விற்பனையும் மிக குறைத்த செலவில் செய்கிறார்கள். கண் பரிசோதனைக்கு ரூபாய் 30 மட்டுமே வாங்கப்படுகிறது. கண்ணாடி நீங்கள் வெளியில் வாங்கும் விலையில் 60 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்
    இத்தனை சேவைகளையும் செய்யும் திரு பி. சுப்பிரமணியம் அவர்களை 'மனித சேவை செம்மல்' என்று அழைத்தால் தகும் தானே..
    இப்பொழுது கூறுங்கள் திரு பி. சுப்பிரமணியம் போன்று சேவை உணர்வோடு, எத்தனை தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்...? இவை வெளியில் தெரிந்து அவர் செய்த சேவை, வெளியில் தெரியாமல் பல லட்சக்கணக்கில் இன்று வரை சேவை செய்துவருகிறார்... பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் இலவசமாக அமைத்து கொடுத்துள்ளார்.

    பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

    பள்ளிகளில் பயிலும் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு, கோவை போக்குவரத்து பயிற்சி பூங்காவில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்றுவிக்கப்படுகிறது. ஏற்கனவே, சாலை பாதுகாப்பு உரிமம் விண்ணப்பதாரர் பயிற்சித் திட்டம் ஜூலை 2017 மூலம் உரிமம் பெற விண்ணப்பித்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 10 மாதங்களில் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.
    இந்நிலையில், ஹோண்டா மோட்டர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட், கோவையில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான தேசிய சாலைப்பாதுகாப்பு கோடைக்கால முகாம் இந்தாண்டு ஆரம்பமாவது குறித்து அறிவித்திருக்கிறது. இந்த முகாமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா மற்றும் ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட்டின் ப்ராண்ட் & கம்யூனிகேஷன் பிரிவின் துணைத்தலைவர் பிரபு நாகராஜ் ஆகியோரின் முன்னிலையில், தொடங்கி வைக்கப்பட்டது.
    தேசிய அளவில் 4 ஆயிரத்து 500 குழந்தைகளுடன், ஹோண்டாவின் தேசிய சாலைப்பாதுகாப்பு கோடைக்கால முகாம் டெல்லி, லூதியான, ஹைதராபாத், புவனேஸ்வர், கட்டாக் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம் இன்று ஆரம்பித்து அடுத்த 7 நாட்களுக்கு நடக்கிறது. சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பயிற்றுவிக்கப்படுவது இந்த முகாமின் சிறப்பம்சமாகும்.
    வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலேயே சாலைப்பாதுகாப்பு குறித்து கற்றுக்கொள்வது, சாலைகளில் பயணப்படும் போது பாதுகாப்பாக இருப்பது என்ற விழிப்புணர்வைப் பெற உதவுவதோடு, ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான நல்ல சாலை அனுபவத்தைப் பெற வழிவகுக்கும்’’ என்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட பயிற்சியாளர்களின் மூலம், குழந்தைகள் பள்ளி பேருந்தில், சைக்கிளிலில் பயணம் செய்யும்போது செய்ய வேண்டியவை  எவை? செய்யக்கூடாதவை எவை? என்பதைப் பயிற்றுவிக்கிறது.
    சிறந்த சாலைப்பாதுகாப்பு வாசகம்’ [‘Best Road Safety Slogan’] போட்டியில், குழந்தைகள் கலந்து கொள்வதன் மூலம், சாலைப்பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை அவர்களது நினைவில் நிறுத்திக்கொள்ள பெரிதும் உதவும் வகையில் நடத்தப்படுகிறது. 9 வயது முதல் 12 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் மத்தியில் இருச்சக்கர வாகனங்கள் குறித்தும், அவற்றில் பயணம் செய்யும்போது கியர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்காக ப்ரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட 50சிசி சிஆர்எஃப் 50 மோட்டர் சைக்கிள்களின் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.



    சோற்று கற்றாலை பல்வேறு பயன்கள்


    சோற்றுக்கற்றாழை செடி பயன்கள்:

    நமது முன்னோர்கள் வீட்டிற்கு குறைந்தது ஒருசோற்றுக்கற்றாழையை நட்டு வைத்திருந்தார்கள்காரணம் சோற்றுக்கற்றாழை எப்போதும் சுற்றுப்புறக்காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும். குறிப்பாககாற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு மற்றும்பென்சீன்(ஞஞுணத்ஞுணஞு) போன்ற நச்சுக்களைஉள்ளிழுத்துக்கொண்டு காற்றை சுத்தமாக்கும்என்பதால் தான்.

    கற்றாழை, மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுத்தாமல் கொசுக்களை விரட்டுகின்றன.சோற்றுக் கற்றாழையின் பயன்களை அறிந்த மக்கள்,அவற்றை வீடுகளில் அலங்கார செடிகளுடன் சேர்த்துவளர்க்கின்றனர். குறிப்பாக, நுழைவாயில், ஜன்னல்போன்ற இடங்களில் தொட்டிகளில் வளர்க்கின்றனர்.இதன் காரணமாக, கொசுக்கள் வீடுகளுக்குள் வருவதுதடுக்கப்படுகிறது.

    சோற்றுக்கற்றாழையை செடி வைத்திருப்பதால், வீடும்குளிர்ச்சியாக நிலவுகிறது.

    சோற்றுக்கற்றாழை பற்றிய சில ஆய்வுகள்:

    ராயல் லண்டன் மருத்துவமனையில்நோயாளிகளுக்கு வயிற்றுப்புண்னைப் போக்குவதற்காகக் கொடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் 38% பேருக்கு முழு குணம் தந்ததாக செய்தி வந்துள்ளது.

    சோற்றுக்கற்றாழைச் சாறு தினம் 2 அவுன்ஸ் உள்ளுக்குக் கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிந்து உண்டாக்கும் Coronary heart disease ஆகிய அச்சம் தரும் உயிர் போக்கி இதய நோய்களைத் தணிக்கிறது என்பது ஒரு மிக முக்கியமான ஆய்வு ஆகும். இதனால் சீரம் கொலஸ்ட்ரால், சீரம் டிரைகிளிசைரைட்ஸ், சீரம் பாஸ்போ லிபிட்ஸ் ஆகியன ரத்தத்தில் மிகுதியாவது தடுக்கப்படுகிறது.

    சோற்றுக் கற்றாழையில் உள்ள கார்போஹைட்ரேட் மெட்டபாலிஸம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும் உணவுக்குப்பின் ஆன சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதயத்துக்கு போதிய பிராண வாயு கிடைக்க வழி செய்கிறது. பிராண வாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காதபோது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச்சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

    சோற்றுக்கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள்Phagocytes மற்றும் Antibodies என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

    சோற்றுக் கற்றாழையில் இருக்கும் Polysaccharidesஎன்னும் மருந்துப் பொருள், பால்வினை நோயான எய்ட்ஸ் எனும் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. நோய்க்கிருமிகளை முற்றிலுமாக அழித்து ஆரோக்கியம் தருகிறது. 8 நோயாளிகளுக்கு தினமும்250 mg Polysaccharides 6 மணி நேரத்துக்கு ஒருமுறை தந்ததில் 90 நாட்களில் அனைவருக்கும் எய்ட்ஸ் நோய் குணமானது தெரிய வருகிறது. மேற்கூறியவை எல்லாம் சமீபகால ஆய்வுகள் என்றாலும், நம் முன்னோர்களும், முனிவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்படுத்திக் கண்ட பலன்கள் நமக்கும் பெருமை தருவதாக அமைகிறது!

    சோற்று கற்றாலை மருத்துவ பயன்கள்:

    கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது.

    கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

    சோற்றுக் கற்றாழை யின் மருத்துவ குணம் வாய்ந்த சதைப் பகுதியை பலமுறை நன்றாகக் கழுவி எடுத்து சாப்பிடலாம். அந்த வழவழப்பான சாற்றை அப்படியே சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் என்பதால், நன்கு கழுவிவிடவும்.

    ·         சோற்றுக் கற்றாழையை உலர்த்தி முறையாகப் பொடித்து வைத்துக்கொண்டு உண்டுவந்தால், எப்போதும் இளமையும் உடல் வலிவும் பெற்று விளங்குவதோடு நூறாண்டு காலம் வாழலாம்.


    ·         கண் பார்வை தெளிவு பெறும்.


    ·         சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.


    ·         சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லெட் அளவு வில்லைகளாக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் தணிந்து ஆரோக்கியம் கிடைக்கிறது.


    ·         உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும்.


    ·         அழகான தோற்றம் ஏற்படும்.


    ·         சோற்றுக்கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால் ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து வெயிலிலிட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினமும் இரவு படுக்கப் போகும்முன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டுவர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.


    ·         சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒரு கப் அளவு எடுத்து இத்தோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய்விட்டு வதக்கிச் சேர்த்து கடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து, வடிந்து, தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித்துளிகளில் சிறுநீர்க்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.


    ·         சோற்று கற்றாலை பல்வேறு மருத்துவ பயன்கள் உண்டு.

    கற்றாழை பயன்பாட்டில் கவனம் தேவை:

    ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் பெருந்தகை சொன்னதற்கிணங்க அளவோடு பயன்படுத்துவது பாதுகாப்பானது ஆகும். வயிற்றுப்போக்கோடு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படவும் செய்யலாம். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது கவனம் தேவை. முதலில் சிறிய அளவில் சோதனையாகக் கொடுத்துப் பின் சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம். கூடுமான வரையில் கர்ப்பிணிகள் சோற்றுக் கற்றாழையை உள்ளுக்கு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோலவே பால் புகட்டும் தாய்மார்களும்குழந்தைகள் நலம் கருதி உள்ளுக்கு உபயோகப்படுத்துவதைத் தவிர்ப்பது நலமாகும்.

    Aloe Vera Products:

    ஹேர் ஆயில் : சதைப்பிடிப்புள்ள மூன்றுகற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒருபாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத்தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில்உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச்சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால்கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

    மூலிகை ஹேர் ஆயில் : தலா 50 கிராம் வெந்தயம்,சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர்,விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம்ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்றுபச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர்,கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்திஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல்எடுத்து கொள்ள வேண்டும். 50 கிராம் கற்றாழை ஜெல்எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டுஉரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர்விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். உளுந்த மாவுபதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்டவேண்டும். இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய்எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல்தட்டியதை போட வேண்டும். அவை எண்ணெயில்வெந்து உதிரும். சாறு முழுவதும்

    எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய்ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறிவுடன் தீயைஅணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும்எண்ணெயை வடிகட்டி ஊற்றினால் ஹேர் ஆயில்தயார். எண்ணெயை தேவையான அளவுள்ளபாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

    மூலிகைக் குளியல் எண்ணெய்: சோற்றுக்கற்றாழையின் சோற்றுப் பகுதியை அரை கிலோவும்,ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில்30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும்.இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக்கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

    கற்றாழை ஜெல்; நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வுசெய்து கவனமாக மென்மையாக மற்றும் மிகஅகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராகவைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிறதிரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர்கற்றாலையை நன்கு கழுகி முடிந்தவுடன்கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்லபோட்டு அடைத்து வைக்க வேண்டும்.

    Aloevera Homemade Soap

    https://www.youtube.com/watch?v=6ixN_s0-fYU

    Aloe Vera Shampoo

    https://www.youtube.com/watch?v=PkCEIst4ncM


    Aloe Vera Recipes:

    சோற்றுக் கற்றாழை ஜூஸ் :

    1. சோற்றுக் கற்றாழை இலை கதுப்பு (எஞுடூ) 2 மேஜைக்கரண்டி

    2. எலுமிச்சம்பழச்சாறு 1 மேஜைக் கரண்டி

    3. தேன் 2 மேஜைக்கரண்டி

    4. உப்பு 1 சிட்டிகைசோற்றுக் கற்றாழை

    ஜூஸ் செய்யும் முறை:

    1. சோற்றுக் கற்றாழை மடலை மண் போக கழுவி, மேல்தோலை மட்டும் சீவி எடுக்கவும்.

    2. உள்ளே ஜெல் போல இருப்பதை சிறிய துண்டாகநறுக்கவும்.

    3. நறுக்கிய கற்றாழையை மிக்ஸியில் அரைக்கவும்.அரைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும்.

    4. ரொம்ப தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் திக்காகவே(சிரப் போல்) கலக்கி கொள்ளவும்.

    சோற்றுக் கற்றாழை ஜூஸ் உடன் எலுமிச்சம்பழச்சாறு,தேன் மற்றம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.இந்த சோற்றுக் கற்றாழை ஜூஸ் ஐ வாரம் ஒரு முறைபருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.இதுவயிற்றுக் கோளாறுகள், மலச்சிக்கல், உடல் உஷ்ணம்,போன்றவற்றிற்கு சிறந்த மூலிகையாகும்.

    கற்றாழை அல்வா:

    தேவையானவை: சோற்றுக் கற்றாழை - கால் கிலோ,முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரைகிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.

    செய்முறை: தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையைஅரிசி கழுவியத் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கற்றாழையைப்போட்டு வேகவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்பு, சுக்கு,ஏலக்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத்தூள் செய்து, கற்றாழையுடன் சேர்க்கவும். கற்றாழைநன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாகப் பொடித்து,அதில் சேர்க்கவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டேஇருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய், தேனைஊற்றி நன்றாகக் கிளறி கீழே இறக்கவும்.

    கற்றாழையின் கூட்டு:

    சோற்றுக் கற்றாழையை எடுத்து சுத்திகரித்து மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து ஏழு முறை நன்றாக நீர்விட்டு கைகளால் தேய்த்து கழுவ சுத்தமாகும். அதனுடைய வாடையும் நீங்கிவிடும். பின்னர் அதை புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துமிக்க காய்களைப் போல கூட்டு செய்து உணவாகச் சாப்பிட சுவையும் சுகமும் தரும்.

    Drink recipe

    https://www.youtube.com/watch?v=-HNp85AKRDA

    Aloe Vera Butter-milk

    https://www.youtube.com/watch?v=j029aRKcsXk

    Honey Aloe Vera Drink

    https://www.youtube.com/watch?v=9UxM4hr-fPo

    Aloe vera Kuzhambu

    https://www.youtube.com/watch?v=-au3Dc3lU74

    Aloe Vera Sweet

    https://www.youtube.com/watch?v=kVWLcR25cjg

    Aloe Vera Laddu

    https://www.youtube.com/watch?v=V1BKJhugmqs

    https://www.youtube.com/watch?v=cB9oEbDCahs

    Aloe Vera Roti/Phulka/Chapati

    https://www.youtube.com/watch?v=hDcSxRhMquk

    Aloe Vera Ginger Lemon Juice

    https://www.youtube.com/watch?v=4p8By46uN-A

    Aloe Vera subzi

    https://www.youtube.com/watch?v=1VaxH5BshCE

    Aloe Vera Vegitable Recipe

    https://www.youtube.com/watch?v=rA4UYsV4wa8

    Aloe Vera Pickle

    https://www.youtube.com/watch?v=IaBO-cSF3Zs

    கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.


    “Beat Plastic Pollution”,
    @the theme for World Environmenl challenges of our time. Chosen by this year’s host, India, the theme of World Environment Day 2018 invites us all to consider how we can make changes in our everyday lives to reduce the heavy burden of plastic pollution on our natural places, our wildlife – and our own health.
    While plastic has many valuable uses, we have become over reliant on single-use or disposable plastic – with severe environmental consequences. Around the world, 1 million plastic drinking bottles are purchased every minute. Every year we use up to 5 trillion disposable plastic bags. In total, 50 per cent of the plastic we use is single use.
    Nearly one third of the plastic packaging we use escapes collection systems, which means that it ends up clogging our city streets and polluting our natural environment. Every year, up to 13 million tons of plastic leak into our oceans, where it smothers coral reefs and threatens vulnerable marine wildlife. The plastic that ends up in the oceans can circle the Earth four times in a single year, and it can persist for up to 1,000 years before it fully disintegrates.
    Plastic also makes its way into our water supply – and thus into our bodies. What harm does that cause? Scientists still aren’t sure, but plastics contain a number of chemicals, many of which are toxic or disrupt hormones. Plastics can also serve as a magnet for other pollutants, including dioxins, metals and pesticides.
    If you can’t reuse it, refuse it
    This year’s World Environment Day provides an opportunity for each of us to embrace the many ways that we can help to combat plastic pollution around the world. And you don’t have to wait until 5 June to act.
    There are so many things that we can do – from asking the restaurants you frequent to stop using plastic straws, to bringing your own coffee mug to work, to pressuring your local authorities to improve how they manage your city’s waste. Here are some other specific ideas:
    • Bring your own shopping bags to the supermarket
    • Pressure food suppliers to use non-plastic packagin
    • Refuse plastic cutlery
    • Pick up any plastic you see the next time you go for a walk on the beach
    What else can we do to tackle this problem? Share your ideas on social media using the hashtag
    #BeatPlasticPollution.
    Coimbatore: The graduation ceremony for Engineering students of PSG College of technology was held at the College premises yesterday.
    In the event,  1323 engineering students received their Graduation certificates from the Chief Guest S.Ranganathan, Vice President, Defence IC, L&T Limited. Amongst them, 384 students have opted for higher studies.
    A release from the College stated that 90 percent of the students have got placed in top companies with per annum salary ranging between Rs.5 Lakhs to 32.5 Lakhs.
    Addressing the students, S.Ranganathan said that Students should realise ground reality and help nation, Parents, and society. He also said that each one of them is a CEO of themselves.


    A call-to-action text Contact us